க.பா.ந. ஆணைக்குழுவின் பரிந்துரையின்மீது காணிப் பயன்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரையின் (பந்தி 9.152) பிரகாரம், தேசிய மற்றும் மாவட்ட அடிப்படையில் நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பதன் மூலம் வடக்கு கிழக்கு மாவட்டங்களுக்காக மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டங்களைத் தயாரித்தல். திட்டங்களைத் தயாரிக்கும் செயற்பாடு 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் அது 2015ஆம் ஆண்டிலும் தொடர்ந்து இடம்பெறுகிறது.
காணிகளைப் பாதுகாக்கின்றபோதும் காணிகளைப் பொறுப்பளிக்கின்றபோதும் சூழலியல் பாதுகாப்பு, உயிர் பல்வகைமை, நிலைபேறான பொருளாதார அபிவிருத்தி,ஓய்வு, பொழுதுபோக்கு தரங்களை சான்றுப்படுத்துதல் என்பவற்றுக்கும் தற்கால மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் கருத்தில் மத, கலாசார மற்றும் பொல்பொருளியல் முக்கியத்துவம்வாய்ந்த நிலத்தைப் பேணிக்காக்கும்பொருட்டு காணிப் பாதுகாப்பின்போது மவட்ட நிர்வாகத்துக்கு வழிகாட்டும் நோக்கத்தில் 08 மாவட்டங்களுக்கான காணிப் பயன்பாட்டுத் திட்டம் தயரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் பரிந்துரைகளையும் பெற்றுக்கொள்ளும் பொருட்டு தேசிய மற்றும் மாவட்ட நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.