கிராம மட்டத்தில் காணிப் பயன்பாட்டு மாதிரிகளைச் செயற்படுத்துதல்
கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் இருக்கின்ற காணி சிக்கல்களின் பிரகாரம் கிராம் அடிப்படையில் காணிப் பயன்பாட்டு மாதிரியைச் செயற்படுத்துவதை நடைமுறைப்படுத்தும்பொருட்டு கிராமமொன்று, கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. கிராமமொன்றைத் தெரிவுசெய்வதற்காக மேற்குறிப்பிட்ட அளவுகோலுக்கு மேலதிகமாக, திட்டங்களைச் செயற்படுத்தும்போது கிராமத்தில் வாழ்கின்ற காணிப் பயன்பாட்டாளர்கள் காட்டுகின்ற செயலூக்கமுள்ள பங்கேற்பும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்த நடவடிக்கைமுறை குறித்த தரவுகளைச் சேகரித்தல் மற்றும் கிராமத்திற்கான திட்ட முன்மொழிவொன்றைத் தயாரித்தல் என்பவற்றின்மூலம் ஆரம்பமாகின்றது. முன்மொழிவு தொகுதியின் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உதவியாளரால் தயாரிக்கப்படுகின்றது. அத்துடன் அது மாவட்ட அலுவலகத்தின் ஊடாக தலைமை அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகின்றது. அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னர் மாவட்ட அலுவலகத்தின் பரிசீலனையின் கீழ் கருத்திட்டம் செயற்படுத்தப்படும்.
நிலத் துண்டு மட்டத்திலான காணிப் பயன்பாட்டு திட்ட மாதிரிகளை ஸ்தாபித்தல்
இந்த நிகழ்ச்சித்திட்டம் பாடசாலை பிள்ளைகள் மற்றும் அரச ஊழியர்கள் உட்பட மக்களுக்கு நேரடியாக செல்வாக்கு செலுத்துவதால் ஏனைய நிகழ்ச்சிகளுக்கிடையில் இது மிகவும பிரபல்யம் வாய்ந்ததாக இருக்கின்றது. சிறிய நிலத் துண்டுகளை வினைத்திறன் மிக்கவகையிலும் உற்பத்தித் திறன் மிக்கவகையிலும் பயன்படுத்துவது எப்படி என்பதைப்பபற்றி மக்களுக்கு அறிவூட்டி அதற்கான தேர்ச்சியையும் அறிவையும் பெற்றுக்கொடுப்பது இந் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். பொதுவாக பாடசாலைகள், மாவட்ட செயலக அலுவலகங்கள், பிரதேச செயலக அலுவலகங்கள் என்பவற்றில் இருக்கின்ற வரையறுக்கப்பட்ட காணித் துண்டுகள் இந் நிகழ்ச்சித்திட்டத்திற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. விவசாய நடவடிக்கைகளில் தற்பொழுது காட்டப்படுகின்ற சார்புநிலை இந் நிகழ்ச்சித் திட்டத்தில் மக்கள் கலந்துகொள்ளுவதை ஊக்குவித்துள்ளது. அத்துடன் அதன்மூலம் நச்சு கலக்காத காய்கறிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது. இவ் ஒவ்வொரு நிகழ்ச்சித்திட்டத்திற்கும் ரூ.50,000/- வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.