எமது நோக்கு
இலங்கையின் நிலவளங்களை மிகச்சிறப்பாகவும் வளங்குன்றாத நிலையிலும் முகாமைத்துவம் செய்தல்.
எமது பணி
நிலவளங்களின் மிகச் சிறப்பாக பயன்படுத்தலை அடைவதற்காக கொள்கைகளை வகுத்தல், திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அவற்றை அமுல்ப்படுத்தலை எளிதாக்குவதுடன் நில வளங்குன்றாத நிலையினையும் சூழற் சமநிலையையும் பேணுதலுமாகும்.
காணிப் பயன்பாட்டுக் கொள்கையைத் தயாரிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் உதவும்பொருட்டும் காணி தகவல்கள் முறைமையொன்றை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டும் அபிவிருத்தி செய்துக்கொள்ளும் பொருட்டும் அமைச்சுகளுக்கு இடையிலான இணைப்பாக்க குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கும் நோக்கத்தில் காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் 1983ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி மற்றும் மகாவளி அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் பிரிவாக முதலில் ஸ்தாபிக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டில் மாவட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இப் பிரிவில் காணிப் பயன்பாடுகளைத் திட்டமிடும் செயற்பாடுகள் மாவட்ட மட்டம் வரை விரிவாக்கப்பட்டது.அத்துடன் 2015 ஆம் ஆண்டில் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் அப்பணிகள் மேலும் பிரதேச செயலகப் பிரிவுகள் வரை விரிவாக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இப்பிரிவை திணைக்களம் ஒன்றின் நிலைக்கு உயர்த்தி மேலதிக பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன.தற்பொழுது இத்திணைக்களம் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்றது.
காணிப் பயன்பாட்டு கொள்கை செயற்பாடுகள் 25 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறன.அத்துடன் அந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர் ஒருவரால் (மா.கா.ப.தி.உ) செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்படுகின்றன.மா.கா.ப.தி.உத்தியோகத்தர்கள் உதவி காணி திட்டமிடுபவர்கள் மற்றும் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உதவியாளர்கள் ஆகியோரின் திட்டமிடல் நடவடிக்கைகளையும் தொகுதி அடிப்படையில் கண்காணிக்கின்றனர்.காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் பற்றிய பிரதிப் பணிப்பாளர் மற்றும் மாணவர் விஞ்ஞானம், தகவல் முறைமை,காணிப் பயன்பாட்டைத் திட்டமிடல் மற்றும் சமூகவியல் தொடர்பான உதவிப் பணிப்பாளர்கள் உற்பட தலைமை அலுவலக நிபுணர்கள் குழுவொன்றின் உதவியுடன் அனைத்து மாவட்ட அடிப்படையிலும் பிரதேச செயலகப் பிரிவு அடிப்படையிலும் இப்பணிப்பாளர் உத்தியொகத்தர்களை மேற்பார்வை செய்வதோடு அவர்களை வழிப்படுத்துகின்றார்.
காணிப் பயன்பாட்டுத் தரவுகள் பகுப்பாய்வுக்கான அனைத்து வசதிகளையும் கொண்ட கணிணி அலகு ஒன்றையும் காணிப் பயன்பாட்டு வரைப்படம் ஒன்றையும் தயாரிப்பதற்காக பூகோள தகவல் முறைமை அலகு ஒன்று திணைக்களத்தின் வசம் உண்டு.